Translate

July 2025

                                   மத்திய மண்டலம்


 ஜுலை 27  ஜுன் 10 அன்று, பாபுவா பணித்தள ஆலயத்தில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, 'ஒரு நபர் ஒரு ஆத்துமா" என்ற கருப்பொருளினை மையமாகக்கொண்டு நடைபெற்ற சுவிசேஷகர்களை உருவாக்கும் கூட்டத்தில் பௌலியா, K-6 மற்றும் நாகடோலி பணித்தளங்களைச் சேர்ந்த 80 விசுவாசிகள் பங்கேற்றனர்.  சகோ. விக்டர் மற்றும் சகோ. குணசேகரன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இப்பணித்தளங்களில் சுவிசேஷம் அறிவிப்பவர்களாக விசுவாசிகள் மாறவும், பணித்தள ஆலயங்களில் புதிய ஆத்துமாக்கள் சேரவும் ஜெபிப்போம். 

ஜுலை 28 கடந்த மாதத்தில் ரோஹ்தாஸ் கோட்டத்தில் நடைபெற்ற 30 வீட்டுக்  கூடுகைகளில் ரோஹ்தாஸ் கோட்டத்தின் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 425 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூடுகையின்போது, கிறிஸ்துவை அறியாத மக்களையும் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் பெருகிவரும் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கைகளுக்காக கர்த்தரைத் துதிப்போம் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம். 

ஜுலை 29 24 இடங்களில் நடத்தப்பட்ட உபவாசக்கூடுகையில் 220 விசுவாசிகள் பங்கேற்றனர்; அத்துடன், கோட்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட இரவு ஜெபங்களில் 250 விசுவாசிகள் பங்கேற்று பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர். பெண்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் 50 பேர் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டங்கள் வாயிலாக விசுவாசிகள் பெலனடையவும், சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம். 

ஜுலை 30  சிக்காரியா கோட்டத்தில் 11 பணித்தள ஆலங்களில் 1362 சிறுவர் சிறுமியருக்கும், ரோஹ்தாஸ் கோட்டத்தில் 14 கிராமங்களில் 1235 சிறுவர் சிறுமியருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இவர்கள் கிறிஸ்துவின் அன்பில் பெலனடையவும், சமுதாயத்திற்குச் சாட்சிகளாக வாழவும், இவர்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜுலை 31  K-6, சடுக்கி மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் வாயிலாக 320 பேர் பயனடைந்தனர். திலௌத்து பணித்தளத்தில் வறுமை நிலையிலிருக்கும் 80 பேருக்கு உணவளிக்கவும், பஞ்சாரி, திலௌத்து மற்றும் செயின்புரா பணித்தளங்களில் இலவச கல்வி ஊழியங்களைச் செய்யவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சமுதாயப் பணிகளுக்காகவும், வறுமை நிலையிலிருக்கும் பணித்தள மக்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.   


June 2025

                                                       மத்திய மண்டலம்


🗣         சல்மா  பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 25 பேர் கலந்துகொண்டு, பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 

🗣 ரோஹ்தாஸ் கோட்டத்திற்குட்பட்ட பணித்தளங்களிலும் மற்றும் ஜெம்ஸ் சிறுவர் காப்பகங்களிலும் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு வேதாகம சிறுகதைகள் மற்றும் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ஜெப வாழ்க்கையில் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்.

🗣 ரோஹ்தாஸ் பணித்தள ஆலயத்தில், ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில், 50 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் பங்கேற்றுவருகின்றனர்.

🗣 ரோஹ்தாஸ் கோட்டத்தின் சடுக்கி, மு-6 மற்றும் சுன்னாகோட்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களின் வாயிலாக 500 பணித்தள மக்களும், கருவந்தியா பணித்தளத்தின் தொலைதூர மருத்துவ ஊழியத்தின் வாயிலாக 52 பேரும் பயனடைந்தனர். மருத்துவ உதவியுடன் சுவிசேஷக் கைப்பிரதிகள் மூலமாக நற்செய்தியினையும் அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.

🗣 மே 6 அன்று பஞ்ச்மகுல் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது.  சகோ. கோபோர்த் ஜெபத்துடன் ஊழியர் இல்லத்தைத் திறந்துவைத்தார்;. இந்நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் மற்றும் ஜெம்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

🗣 சிங்காரியா  பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் முகாமில், 215 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், ஆராதனைகள், குறுநாடகங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக  வாலிபருக்கேற்ற வேதாகமச் சத்தியங்கள் அறிவிக்கப்பட்டதுடன், வாலிபருக்கேற்ற வேதாகமச் செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் வாலிபர்கள் வழி நடத்தப்பட்டனர். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. 

🗣 டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 12 பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்கள், ஞாயிறு பள்ளிகள், விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் மற்றும் சிறுவர் நற்செய்திக் குழு ஊழியங்கள் வாயிலாக 1310 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க உதவிசெய்தார்.

🗣 தாராநகர் பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்படவும், பலுவாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், ராய்ப்புரா பணித்தளத்தில் நடைபெற்று வரும் தெபோராள் பயிற்சி மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், லுக்கா சமுதாய மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

MAY 2025




 மத்திய மண்டலம்


                                                          
சேவஹி சமுதாய மையத்தில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான கூடுகையில் 120 சிறுவர்கள் பங்கேற்றனர். பாடல்கள், வேதவசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அவர்களுக்கு அறிவிக்கவும், ஜெப வேளையில் அர்ப்பணிப்பிற்குள் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் கிருபைசெய்தார். 

•  ஏப்ரல் 16,17,18 ஆகிய தினங்கள் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர். பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிக்கும் வாய்ப்பினை கர்த்தர் தந்ததுடன், பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஒருமனதுடன் ஜெபிக்க உதவிசெய்தார். 

•      நவாடி, கஜுர் பிஹா, பீஷ்ராம்பூர், கமரியா மற்றும் நிம்மியாடி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகள் மூலமாக 561 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. 

•      ராய்புரா மற்றும் தாவுத்நகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சீஷத்துவப் பயிற்சி முகாமில் சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், ரோஹ்தாஸ் பணித்தளத்தில் வாரந்தோறும் மாலை நேரத்தில் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளிலும் 50 வாலிபர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர். 

•   டெஹ்ரி ஆன் சோன் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களின் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட கன்வென்ஷன் கூட்டத்தில் 115 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, லத்தௌர் ஜனங்கள் மத்தியில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 

•     சம்பா கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் வாயிலாக 170 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கவும், புதிய ஏற்பாடுகள் மற்றும் சுவிசேஷக் கைப்பிரதிகள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். 

•    ரோஹ்தாஸ் பணித்தளத்தில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 20 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மந்தையில் இணைந்தனர்; தேவனுக்கே மகிமை!  

•     வரும்  நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் நிலங்கள் வாங்கப்பட்டு ஆலயங்கள் கட்டப்படவும் மற்றும் கருவந்தியா பணித்தளத்தில் காணப்படும் நட் சமுதாய மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். 


April 2025

  மத்திய மண்டலம்

• பௌலியா பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன்
கூட்டங்களில் 800 பேர் பங்கேற்றனர். ஊழியர்கள் சகோ. ராகேஷ் குமார் மற்றும் சகோ. சுரேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர்.  அத்துடன், தாவூத்நகர் மற்றும் ஹசுபூரா பணித்தளங்களில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களிலும் 108 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், சகோ. சுரேஷ்  மற்றும்  சகோ. P.C. ஜான்சன் ஆகியோர் தேவ செய்தியளித்தனர்; விசுவாசத்தில் வளரவும், ஊழித்தில் உதவியாயிருக்கவும் விசுவாசிகளை இக்கூடுகை உற்சாகப்படுத்தியது. மேலும், டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டங்களிலும் 300 விசுவாசிகள் பங்கேற்றனர்.
• மார்ச் 3 அன்று படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில், 150 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூடுகையில், சகோ. சுரேஷ் மற்றும் சகோ. கில்பட் குமார் ஆசியோர் தேவ செய்தியளித்து, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினர். தொடர்ந்து, மார்ச் 14 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உச்சைலா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்பு உபவாசக் கூடுகையிலும் விசுவாசிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
• ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும், ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் வாலிபர்களுக்கான வேதாகம வகுப்பில் 50 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் கலந்துகொண்டு விசுவாசத்திலும் வேத அறிவிலும் வளர்ந்துவருகின்றனர்.
• தாவூத்நகர், படிஹானட் டோலா மற்றும் பீஷ்ராம்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்.
பாடல்கள், வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின்
அன்பினை சிறுவர் சிறுமியருக்கு அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார்.
• அமிரிடோலா, தாவன்பூர், படியாபாக் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் மூலமாக, சரீர சுகத்துடன் சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.
• பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வாலிபர் கூட்டங்களுக்காகவும், நவாட்டா மற்றும் திலௌத்து ஆகிய பணித்தளங்களில்
நிலப் பிரச்சனைகள் மாறவும் மற்றும் டால்மியாநகர், ஹஸ்புரா, ராஜ்பூர், ஜோனா மற்றும் கப்பர்புட்டி ஆகிய பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலங்கள் விரைவில் வாங்கப்படவும் தாலா மற்றும் திலௌத்து பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
 

March 2025

 மத்திய மண்டலம்


  • கருவந்தியா, சிக்காரியா மற்றும் நாசிரிகஞ்ச் ஆகிய பணித்தளஙகளில் நடைபெற்ற வருடாந்திர சிறுவர் கன்வென்ஷன் கூட்டங்களில் பணித்தளச் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள், வேதாகமக் கதைகள் மற்றும் வேத வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், ஜெபவேளையின்போது அநேகர் தங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் அன்புக்கு அர்ப்பணித்த காட்சியினால் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
  • பட்டனுவா டோலா, டால்மியாநகர் மற்றும் பீஷ்ராம்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ஆவிக்குரிய மற்றும் வேதபாட வகுப்புகளில் 192 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர். வசனத்தின்படியும், பாவத்திற்கு விலகியும் மற்றும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வது குறித்தும் கொடுக்கப்பட்ட போதனைக்கு, சிறுவர் சிறுமியர் தங்களை அர்ப்பணித்தனர்; தேவனுக்கே மகிமை!
  • நிம்மியாடி, கமரியா, சிக்காரியா, டால்மியாநகர், பலுவாடி, நாசிரிகஞ்ச் மற்றும் பட்டனுவா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் குழுக்களின் மூலமாக (புழழன நேறள உடரடி) 1051 சிறுவர் சிறுமியரைச் சந்திக்கவும், கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். 
  • பட்டனுவா டோலா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில் 70 விசுவாசிகளும், தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 100 விசுவாசிகளும் மற்றும் ஹஸ்புரா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 98 விசுவாசிகளும் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்க தேவன் உதவிசெய்தார். 
  • பிப்ரவரி 5 மற்றும் 12 ஆகிய தினங்கள், நாசிரிகஞ்ச் மற்றும் ரோஹ்தாஸ் மலையின் மேலுள்ள தலா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். 
  • ரோஹ்தாஸ் பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 22 பேர், பிப்ரவரி 14 அன்று உடன்படிக்கையின் மூலம் தேவனை மகிமைப்படுத்தினர்.
  • பிப்ரவரி 11 அன்று ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 130 பேர் பங்கேற்றனர்; சகோ. சுரேஷ் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபரின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளையும் அளித்து அவர்களுக்காக ஜெபித்தார். 
  • பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயங்கள் மற்றும் ஊழியர் இல்லங்களுக்காகவும், டால்மியாநகர், கப்பர்புட்டி. ராஜ்புர் மற்றும் ஹஸ்புரா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்பட ஏற்ற நிலங்கள் கிடைக்கவும் மற்றும் பணித்தளங்களில் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருக்கும் நற்செய்திக் கூட்டங்கள் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம். 



FEBRUARY 2025

 மத்திய மண்டலச் செய்திகள்




பலுவாரி, நாசிரிகஞ்ச் மற்றும் நிம்மியாடி ஆகிய பணித்தளங்களில் 693 சிறுவர் சிறுமியருக்கு, ஞாயிறுப் பள்ளிகள் மற்றும் சிறுவர் ஊழியங்களின் மூலமாக கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது; இச்சிறுவர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் கிறிஸ்துவினை அறிய ஜெபிப்போம்.

பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்பின் வாயிலாக புதிதாக 4539 பேருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 

தாவூத்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திப் பவனியில் சுமார் 800 பேர் பங்கேற்றனர். பணித்தள மக்கள் மற்றும் 35 காவல்துறை அதிகாரிகளுக்கு கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 

ராம்டிகரா பணித்தளத்தில் நடைபெற்ற கைம்பெண்களுக்கான கூடுகையில் பங்கேற்ற 200 கைம்பெண்களுக்கு, சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இலவச ஆடைகளும் வழங்கப்பட்டன. 

பஞ்சாரி, ராம்டிகரா, திலௌத்து, சேவஹி மற்றும் தும்பா ஆகிய பணித்தளங்களில் மருத்துவ ஊழியங்கள் மூலமாக நடைபெற்ற வெளிஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். இவ்வூழியத்தின்போது, சுவிசேஷத்துடன், மருத்துவ ஆலோசனைகளும் ஜனங்களுக்கு வழங்கப்பட்டன. 

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வேத வசனத்தைக் கற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை!

டால்மியா நகர் மற்றும் கப்பர்புட்டி பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலம் கிடைக்கவும் மற்றும் விரைவில் ஆலயம் கட்டப்படவும், பிப்ரவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் கோட்டக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், லுக்கா மற்றும் பஞ்ச்மகுல் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சுகவீனமாயிருக்கும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.