• ஏப்ரல் 16,17,18 ஆகிய தினங்கள் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர். பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிக்கும் வாய்ப்பினை கர்த்தர் தந்ததுடன், பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஒருமனதுடன் ஜெபிக்க உதவிசெய்தார்.
• நவாடி, கஜுர் பிஹா, பீஷ்ராம்பூர், கமரியா மற்றும் நிம்மியாடி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகள் மூலமாக 561 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.
• ராய்புரா மற்றும் தாவுத்நகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சீஷத்துவப் பயிற்சி முகாமில் சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், ரோஹ்தாஸ் பணித்தளத்தில் வாரந்தோறும் மாலை நேரத்தில் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளிலும் 50 வாலிபர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர்.
• டெஹ்ரி ஆன் சோன் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களின் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட கன்வென்ஷன் கூட்டத்தில் 115 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, லத்தௌர் ஜனங்கள் மத்தியில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
• சம்பா கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் வாயிலாக 170 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கவும், புதிய ஏற்பாடுகள் மற்றும் சுவிசேஷக் கைப்பிரதிகள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார்.
• ரோஹ்தாஸ் பணித்தளத்தில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 20 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மந்தையில் இணைந்தனர்; தேவனுக்கே மகிமை!
• வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் நிலங்கள் வாங்கப்பட்டு ஆலயங்கள் கட்டப்படவும் மற்றும் கருவந்தியா பணித்தளத்தில் காணப்படும் நட் சமுதாய மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.