ஜூலை 27 திலோக்கர் பணித்தளத்தின் சுட்டியா கிராமத்தில் செய்யப்பட்ட நற்செய்தி ஊழியத்தின் மூலமாக அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், வியாதியுள்ளவர்களுக்காக ஜெபிக்கவும், மற்றும் திலௌத்து பணித்ளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில், வருகைதந்திருந்த சுமார் 500 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தினைச் சுற்றியுள்ள கிராமங்களில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் பணிகளுக்காகவும், ஆத்துமாக்கள் ஆண்டவரை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜூலை 28 திலோக்கர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் ஐக்கியக் கூட்டத்தில் 23 பேரும், தொடர்ந்து, ஜுன் 11 அன்று ஹஸ்புரா பணித்தளத்தில் பெண்கள் கூட்டம் நடைபெற்றது; 55 பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்றனர். வேதாகமப் போதனைகளுடன், குடும்பங்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக இணைந்து ஜெபிக்கவும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை உற்சாகப்படுத்தவும் கர்த்தர் கிருபைசெய்தார். பணித்தளங்களில் பெலவீனமாயிருக்கும் விசுவாசிகளுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
ஜூலை 29 ரோஹ்தாஸ் மலையின் சோட்டா லுகா, படா லுகா மற்றும் பஹாரு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகச் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. மாலை நேரத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் 200 பேர் பங்கேற்றனர். ஜுன் 1 அன்று நபிநகர் பணித்தளத்தின் புகான் பிகா கிராமத்தில் நடைபெற்ற வீட்டு சபை ஆராதனையில் 10 பேரும், ஜுன் 5 அன்று டெஹ்ரி பணித்தளத்தின் நியூ ஏரியா தெருவில் நடைபெற்ற வீட்டுக் கூட்டத்தில் 15 பேரும் பங்கேற்றனர். ராஜ்பூர், ரபிகஞ்ச் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களில் ஆலயங்கள் விரைவில் கட்டப்பட ஜெபிப்போம்.
ஜூலை 30 ஜுன் 12 அன்று தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 62 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும், விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், மற்றும் தேசம் தேவனை அறிந்துகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். டால்மியாநகர் பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடங்கப்படவுள்ள டியூசன் மையங்களுக்காகவும், இதன் மூலம் பிள்ளைகள் கல்வியில் வளரவும், அத்துடன் இயேசுவையும் அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜூலை 31 ராஜ்பூர் பணித்தளத்தில் ஆலயத்திற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், நௌஹட்டா பணித்தளத்தில் எதிர்ப்புகள் நீங்கவும், பணித்தளங்களில் வாலிபர்கள் போதைப் பழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும், சிறுபிள்ளைகள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், புதிய கிராமங்களில் நற்செய்தியினை அறிவிக்க வாசல்கள் திறக்கப்படவும் ஜெபிப்போம்.
.jpg)





