Translate

July 2026




ஜூலை 27 
திலோக்கர் பணித்தளத்தின் சுட்டியா கிராமத்தில் செய்யப்பட்ட நற்செய்தி ஊழியத்தின் மூலமாக அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், வியாதியுள்ளவர்களுக்காக ஜெபிக்கவும், மற்றும் திலௌத்து பணித்ளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில், வருகைதந்திருந்த சுமார் 500 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தினைச் சுற்றியுள்ள கிராமங்களில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் பணிகளுக்காகவும், ஆத்துமாக்கள் ஆண்டவரை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.  

ஜூலை 28 திலோக்கர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் ஐக்கியக் கூட்டத்தில் 23 பேரும், தொடர்ந்து, ஜுன் 11 அன்று ஹஸ்புரா பணித்தளத்தில் பெண்கள் கூட்டம் நடைபெற்றது; 55 பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்றனர். வேதாகமப் போதனைகளுடன், குடும்பங்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக இணைந்து ஜெபிக்கவும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை உற்சாகப்படுத்தவும் கர்த்தர் கிருபைசெய்தார். பணித்தளங்களில் பெலவீனமாயிருக்கும் விசுவாசிகளுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜூலை 29 ரோஹ்தாஸ் மலையின் சோட்டா லுகா, படா லுகா மற்றும் பஹாரு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகச் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. மாலை நேரத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் 200 பேர் பங்கேற்றனர். ஜுன் 1 அன்று நபிநகர் பணித்தளத்தின் புகான் பிகா கிராமத்தில் நடைபெற்ற வீட்டு சபை ஆராதனையில் 10 பேரும், ஜுன் 5 அன்று டெஹ்ரி பணித்தளத்தின் நியூ ஏரியா தெருவில் நடைபெற்ற வீட்டுக் கூட்டத்தில் 15 பேரும் பங்கேற்றனர். ராஜ்பூர், ரபிகஞ்ச் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களில் ஆலயங்கள் விரைவில் கட்டப்பட ஜெபிப்போம். 

ஜூலை 30 ஜுன் 12 அன்று தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 62 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும், விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், மற்றும் தேசம் தேவனை அறிந்துகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். டால்மியாநகர் பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடங்கப்படவுள்ள டியூசன் மையங்களுக்காகவும், இதன் மூலம் பிள்ளைகள் கல்வியில் வளரவும், அத்துடன் இயேசுவையும் அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 31 ராஜ்பூர் பணித்தளத்தில் ஆலயத்திற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், நௌஹட்டா பணித்தளத்தில் எதிர்ப்புகள் நீங்கவும், பணித்தளங்களில் வாலிபர்கள் போதைப் பழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும், சிறுபிள்ளைகள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், புதிய கிராமங்களில் நற்செய்தியினை அறிவிக்க வாசல்கள் திறக்கப்படவும் ஜெபிப்போம். 


June 2026

 

ஜூன் 26 டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் மே 8 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், டெஹ்ரி ஆன்சோன், டால்மியா நகர் மற்றும் நியூ டிலியான் பணித்தளங்களைச் சேர்ந்த 200 வாலிபர்கள் பங்கேற்றனர். பாடல்கள் ஆராதனை மற்றும் வாலிபர்களுக்கேற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன், செய்தி வேளையின் போது கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ விடுக்கப்பட்ட சவாலுக்கு பல வாலிபர்கள் தங்களை அர்ப்பணித்தனர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். 


ஜூன் 27 சடுக்கி, சரோதா, கர்மா, நீர்பூர், நவாடி, ஜமுனா கோவிந்பூர், உன்சைலா, ஜலாலாபாத், பாஸ் கட்டியா, சிவ்பூர், பெலாபூர், சுந்தர்கஞ்ச், பக்னோரா, சால்மா, ஹரியாதிஹ், ஜம்தஹா, கோரியா, பாரா, திஹ், சாலியா, படா லுகா, சோட்டா லுகா, பஹாரு ஆகிய பணித்தளங்களில், சுவிசேஷக் கைப்பதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாகவும், தனிநபர் ஊழியங்கள் மூலமாகவும் செய்யப்பட்ட திறந்தவெளி சுவிசேஷ ஊழியங்களின் வாயிலாக, அநேக ஆத்மாக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். நற்செய்தியைக் கேட்டவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம். 

ஜூன் 28 தரிஹட் பணித்தள பயிற்சி மையத்தில், நான்காவது அணியினர் தையற் பயிற்சியினை நிறைவு செய்ய கர்த்தர் உதவி செய்தார். டெஹ்ரி ஆன் சோன்  மற்றும் டால்மியா நகர் பணித்தளங்களில் ஆலய ஆராதனைக்கு விரோதமாக செயல்படுவோரைக் கர்த்தர் சந்திக்கவும், தடைகள் நீங்கி விடுதலையோடு மக்கள் கிறிஸ்துவை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.


ஜூன் 29 டால்மியா நகர், திலௌத்து, படுக்கா புத்வா மற்றும் நவாட்டா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். அம்பா பணித்தள ஊழியர் இல்லக் கட்டுமான பணிகளுக்காகவும், மத்குபியா, சுவர்மன்வா, நவாடிஹ் பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு வாசல்களைக் கர்த்தர் திறக்கவும், பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், பணித்தளங்களில் சுகவீனம் ஆகவும் மற்றும் தேவைகளுடனும் இருக்கும் சுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.


ஜூன் 30 படுக்கா புத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற் பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், ரோஹ்தாஸ் கோட்டத்தில் கல்லறை தோட்டத்திற்கான இடம் கிடைக்கவும், நவாட்டா மற்றும் திலௌத்து பணித்தளங்களில் காணப்பட்டுவரும் நிலப் பிரச்சனைகள் நீங்கவும், புதிதாக ஆராதனையில் கலந்து கொள்ளும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.


May 2026



மே 26 ஏப்ரல் 1, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ரோஹ்தாஸ் மலையின் கூபா பணித்தளத்திற்கு அருகிலிருக்கும் ரேஹல் கிராமத்தில் நடைபெற்ற திறந்தவெளி கன்வென்ஷன் கூட்டத்தில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. கில்பட் குமார் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்திற்காகவும், மற்றும் இப்பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஆத்தும அறுவடைப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

மே 27 ஏப்ரல் 10 அன்று திலௌத்து பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 150 பேர் பங்கேற்று வசனத்திற்கு ஆர்வமுடன் செவிகொடுத்ததுடன், பல்வேறு ஜெபக் குறிப்புகளுக்காகப் பாரத்துடன் ஜெபித்தனர். தாலா மற்றும் டெஹ்ரி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறவும், சுனஹட்டா கிராமத்தில் விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம். 

மே 28 'ஆயத்தப்படு மற்றவர்களை ஆயத்தப்படுத்து" என்ற கருப்பொருளின் கீழ், நபிநகர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 50 பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 36 பெண்கள் பங்கேற்றனர். பட்டனவா டோலா பணித்தளத்தில் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப்பணிகளுக்காக ஜெபிப்போம். 

மே 29 ஏப்ரல் 14 அன்று டெஹ்ரி ஆன் சோன் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 112 வாலிபர் பங்கேற்றனர். ராஜ்பூர், ரபிகஞ்ச் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், கோ பணித்தளத்தில் உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.

மே 30 நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற 7 நாட்கள் தொடர் உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழிங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.  

மே 31 K-6 பணித்தளத்தில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற வேதாகமக் கருத்தரங்கை கர்த்தர் ஆசீர்வதித்தார்; காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் 60 விசுவாசிகள் பங்கேற்றனர். சுகவீனமாயிருக்கும் விசுhவிகள் விரைவில் சுகம் பெறவும், விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். ரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.  

April 2026

 


ஏப்ரல் 26 'கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 24 பேர் உடன்படிக்கையின் வாயிலாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஞாயிறுப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 120 சிறுவர்களையும் மற்றும் சிறுவர் நற்செய்திக் குழுக்கள் மூலமாக 1051 சிறுவர்களையும் சந்திக்கவும், டெஹ்ரி பணித்தள ஆலய விசுவாசிகள் மூலமாக அயலகத்தாருக்கு சுவிசேஷம் அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். தாலா பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 27 'திலௌக்கர் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் ஜெபக் கூட்டத்தில் 'கடைசி நாட்களின் எழுப்புதல்" என்ற தலைப்பின் கீழ் சகோ. கில்பட் குமார் மற்றும் திருமதி காட்வின் கிளாஸ்டின் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர்; 60 விசுவாசிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த மாதத்தில், பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் மூலமாக மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுடன், கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். திலௌத்து, நவாட்டா பணித்தளங்களின் நிலப் பிரச்சனைகள் நீங்க ஜெபிப்போம்.  

ஏப்ரல் 28 'மார்ச் 6 அன்று ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், மானு, மு-6, பவுலியா, பஞ்சாரி மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 200 விசுவாசிகள் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர்; இக்கூட்டத்தில், சகோ. சுரேஷ் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார். மார்ச் 12 அன்று பீஷ்ராம்பூர் பணித்தளத்தில்  நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 120 பேர் கலந்துகொண்டனர். 10 மற்றும் 12 வகுப்ப பயிலும் மாணவர்களுக்காக மற்றும் அவர்களது மேற்படிப்பிற்காக ஜெபிப்போம். 

ஏப்ரல்29 'படுக்காபுத்வா மற்றும் துக்கா பணித்தளங்களில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள் நடைபெற்ற இளைஞர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில், 550 இளைஞர்கள் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் ஆராதனையுடன், இளையோரை ஊக்குவிக்கும் பல்வேறு விளையாட்டுகளைத் தொடர்ந்து, வசனத்திலும் அவர்களை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, மு-6 பணித்தளத்தில் மார்ச் 14 அன்று நடைபெற்ற வேதாகமக் கருத்தரங்கில் 10 வாலிபர்கள் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் வாலிபரை வசனத்தில் வழிநடத்தினார். படுக்காபுத்வா பணித்தளத்தின் பள்ளி கட்டிடப் பணிகளுக்காகவும், சுன்ஹட்டா பணித்தளத்தில் நிலம் விரைவில் வாங்கப்படவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 30 'தன்சா பணித்தளத்தில் மார்ச் 19 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற விசுவாசிகளுக்கான கூட்டத்தில், பணித்தள விசுவாசிகள் 60 பேர் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, 'இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்" என்ற கருப்பொருளின் கீழ், தரிஹட் பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சீஷத்துவப் பயிற்சி முகாமில் 250 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வரும் நாட்களில் நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் உபவாசக் கூடுகைக்காகவும் மற்றம் விடுதலை கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.

March 2026

 



மார்ச் 27 : துவா, சம்பா, தாவன்பூர், பாலேஜா, தேவரியா, சசராம் மற்றும் அம்ரதலாப் ஆகிய பணித்தளங்களில் புதிதாக விசுவாசிகளின் வீடுகளில் வீட்டு ஜெபக் கூடுகைகளைத் தொடங்கவும், புதிய ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தினைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். நாசிரிகஞ்ச் மற்றும் அம்பா பணித்தளங்களில் சுமார் 120 பேர் தவறாது ஆலய ஆராதனைகளில் பங்கேற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை! வீட்டு ஜெபக்கூடுகைகள் தவறாமல் நடைபெறவும், தடைகள் மாறவும், அநேகர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

மார்ச் 28 : சேவஹி பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். மேலும், படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில், போதகர் ஜெயக்குமார் மற்றும் அவரது துணைவியார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளரவும், வேத வசனங்களை அறிந்துகொள்ளவும், ஆத்தும ஆதாயகர்களாக தேவ ராஜ்யத்திற்காகச் செயல்படவும் ஜெபிப்போம். 

மார்ச் 29 : கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற ரோஹ்தாஸ் மற்றும் சிக்காரியா கோட்ட ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகையில், ஊழியர்கள் குடும்பமாகப் பங்கேற்றனர். சைன்புரா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில், 30 விசுவாசிகள் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், சுன்ஹட்டா பணித்தளத்தில் விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம் மற்றும் திலௌத்து, நவாட்டா பணித்தளங்ககளின் நிலப் பிரச்சனைகள் விரைவில் தீரவும் ஜெபிப்போம்.  

மார்ச் 30 : பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி மற்றும் சிறுவர் ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியருக்கு வேத வசனங்கள், பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாகக் கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். லூக்கா, பஞ்சாரி, தும்பா மற்றும் தலா பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டிடப்பணிகள் தடையின்றி நடைபெறவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 31 : பெலாய், ராம்நகர் மற்றும் புதிவான் பணித்தளங்களில் 30 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஆலய ஆராதனையில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர் மற்றும் 10 பேர் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலம் உறுதிப்படுத்த தங்களை அர்ப்பணித்துள்ளனர்; தேவனுக்கே மகிமை! சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் குணமடையவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

Feb 2026

 


பிப்ரவரி 24
பீஷ்ராம்பூர், டெஹ்ரி, பாரூன், கமரியா, ரத்துபிஹா, கருவந்தியா, கர்மா, நிம்மியாடி, தன்சா மற்றும் சடுக்கி ஆகிய பணித்தளங்களின் ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையங்கள் மற்றும் சமுதாய மையங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 1300-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் மற்றும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 25 கருவந்தியா ஜெம்ஸ் மருத்துவ மையத்தின் மூலமாக படியாபாக், அம்ரிடோலா மற்றும் கூபா ஆகிய கிராமங்களின் 45-க்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையினை வழங்கவும், அத்துடன் கிராம மக்கள் மத்தியில் சுகாதாரத்திற்கடுத்த விழிப்புணர்வினை அளிக்கவும் மற்றும் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்ளதங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களுக்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 26 திலௌத்து பணித்தளத்தில் லத்தௌர் சமுதாயத்தைச் சேர்ந்த 40 பேர் தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்குபெற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை! பஞ்சாரி பணித்தள ஆலயத்திற்குச் செல்லும் சாலை அரசினால் சீரமைக்கப்பட்டுள்ளது. திலௌத்து பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயச் சுற்றுச் சுவர் பணிகளுக்காகவும், நவாட்டா பணித்தளத்தில் தொடர்ந்து காணப்படும் நிலப் பிரச்சனைகள் மாறவும் மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 27 குளிர்காலத்தை முன்னிட்டு பணித்தளங்களில் 240 பேருக்கு இலவச கம்பளிகளை வழங்கவும், 3500-க்கும் அதிகமான ஜனங்களுக்கு உணவளிக்கவும், கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய சுமார் 200 பேருக்கு இலவசமாக வேதாகமங்களை வழங்கவும் கர்த்தர் உதவிசெய்தார். கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்படவும், சுவிசேஷத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 28 சிக்காரியா கோட்டத்திற்குட்பட்ட பணித்தளங்களில் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், தன்சா மற்றும் சடுக்கி பணித்தளங்களின் ஜெம்ஸ் சமுதாய மையப் புனரமைப்புப் பணிகளுக்காகவும், படுக்காபுத்வா பணித்தளத்தின் பகற்பாதுகாப்பு மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். சகோதரி லலிதா தேவி மற்றும் சகோதரி கவிதா தேவி ஆகியோர் சரீர சுகம் பெற்று ஆராதனையில் தொடர்ந்து பங்குபெற்றுவருகின்றனர்; மேலும், ஒன்பது வருடங்களாக குழந்தையின்றியிருந்த சகோதரி ரேஷ்மா தேவிக்கு குழந்தை செல்வத்தைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்துள்ளார்; தேவனுக்கே மகிமை!      

Jan 2026

 


ஜனவரி -  27
கூபா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமின் வாயிலாக, கூபா மற்றும் இப்பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 350 பேர் பயனடைந்தனர். அத்துடன், சௌபியா கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமின் மூலமாகவும் 268 பேர் பயனடைந்தனர். சிகிச்சையுடன் கிறிஸ்துவின் அன்பினையும் கூறி அவர்களுக்காக ஜெபிக்க கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் மருத்துவ வசதியின்றி காணப்படும் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.

ஜனவரி- 28 திலௌத்து, பஞ்சாரி மற்றும் திலோக்கர் ஆகிய பணித்தளங்களில், கிறிஸ்து பிறப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பணித்தள மக்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, சுவிசேஷப் பாடல்கள் மற்றும் நாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை சுவிசேஷமாகவும் மற்றும் கைப்பிரதிகள் வாயிலாகவும் கூடிவந்தோர்க்கு அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் தொடர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

ஜனவரி - 29 ஹஸ்புரா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்; இக்கூடுகையில், சகோதரி விமலா ஜான்சன் கர்த்தருடைய வார்த்தையுடன் பெண்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தார். பணித்தள பெண்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும், பெண்கள் சமுதாயத்தில் வல்லமையாகப் பயன்படுத்தப்படவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 30 ஹர்க்கா, தரிஹட், பாபுகஞ்ச் மற்றும் இப்பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் விசுவாசிகளின் வீடுகளில் நடைபெற்ற வீட்டு ஜெபக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சைன்புரா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டத்தில் 50 விசுவாசிகள் கலந்துகொண்டு பல்வேறு குறிப்புக்களுக்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் வீட்டு ஜெபக் கூடுகைகள் பெருகவும், விசுவாசிகளின் வீடுகள் கிறிஸ்துவை அறிவிக்கும் ஸ்தலங்களாக மாறவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 31  பணித்தளங்களில் செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலமாக 1213 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர். தன்சா, சடுக்கி மற்றும் கர்மஹி ஆகிய பணித்தளங்களில் கல்வி ஊழியத்துடன் செய்யப்பட்டுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.