மத்திய மண்டலம்
அக்டோபர் : 27 பஞ்சாரி பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூடுகையில், சகோ. அசோக் பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளுக்காக ஜெபித்தார். விசுவாசிகளை உற்சாகமடையச் செய்யும் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கூடவே பரிமாறப்பட்ட ஐக்கிய விருந்து விசுவாசிகளுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கியதுடன், உற்சாகத்தையும் உருவாக்கியது. கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்பட ஜெபிப்போம்.
அக்டோபர் : 28 பணித்தளங்களில், 35 இடங்களில் நடைபெற்ற வீட்டுக் கூடுகைகளில் 300 பேருடன் இணைந்து கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 350 விசுவாசிகள் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் இன்னும் அநேக வீட்டுக் கூடுகைகள் ஆரம்பிக்கப்படவும், சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டோர் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், பணித்தளங்களில் ஊழியத் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 29 திலௌத்து மற்றும் சைன்புரா பணித்தளங்களில் நடைபெற்ற இரவுக் கூட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டு பணித்தளத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவளிக்கவும், கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபை செய்தார். திலௌத்து பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் பிரச்சனைகள் மாறி விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படவும், நவாட்டா பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறவும் மற்றும் பட்காபுத்வா பணித்தளத்தில் பகற் பாதுகாப்பு மையம் கட்டப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 30 ராய்புரா மற்றும் அம்ரி பணித்தளங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் 82 பேர் பங்கேற்றனர். உச்சைலா பணித்தளத்தில் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து நடைபெற்ற வேதாகமப் போட்டியில் 50 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வியாதியின் பிடியிலிருந்த அநேகரை கர்த்தர் விடுதலையாக்கினார்; தேவனுக்கே மகிமை! வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் வாலிபர், பெண்கள் மற்றும் பிற ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
அக்டோபர் : 31 ஹரிடோலா, பஞ்சாரி, டாலா, சட்னிபிஹா, சைன்புரா, நாகடோலி, கூபா, சிக்காரியா, மிர்ராசராய் மற்றும் திலௌத்து ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக நூற்றுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். நாகடோலி மற்றும் பஞ்ச்மகுல் பணித்தளங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவும், பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.